Wednesday, January 17, 2007

யார் இவர்கள்?.....1


ஏன் இதை எழுதுகிறேன்?
பாரத தேசத்தில், எல்லா மதங்களும் இறைவனை அடையும் பாதைகளே, அனைத்தும் ஒரே இலக்கை நோக்கியே அழைத்துச் செல்கின்றன என்ற தவறான கருத்து காலம்காலமாக திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. ஹிந்துவின் மனதில் குழப்பமான நிலையை ஏற்படுத்துவற்காகவே இதுபோன்ற தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. எல்லாம் ஒன்று எனில் இங்கு மதங்களுக்குள் சண்டை எதற்கு? மதமாற்றம் என்ற பெயரில் ஆள் பிடிக்கும் வேலை எதற்கு? மன மாற்றம் இல்லாமல் செய்யப்படும் மதமாற்றத்தால் என்ன லாபம்? ஒரு தர்மத்தை தவறாக சித்தரித்து தன் மதத்தின் உண்மையான கோட்பாடுகளை மறைத்து, ஆசை வார்த்தைக் காட்டி மாற்றுவது எதற்காக? இதுபோன்ற கேள்விகளுக்கு நாம் விடை காண முற்பட்டால் உண்மையை புரிந்து கொள்ள முடியும். ஆள் பிடித்து பிறகு நாட்டைப் பிடிக்கும் இந்த கூட்டங்களின் உண்மையான முகத்தைக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.



போர்க்களத்தில் தன்னை அழிக்க எதிரில் நிற்கும் எதிரியின் பலம்,பலவீனம் இரண்டையும் மதிப்பிடுவது அவசியம். எப்படி தன் பலம், பலவீனம் ஆராயப்படுகிறதோ அதற்கு இணையாக எதிராளியின் பலம், பலவீனங்களும் ஆராயப்பட வேண்டும். இன்று நமது போர்க்களத்தில் நம்மை அழிக்க துடிக்கும் பிரதான எதிரிகள் இருவர் . அவர்களின் பலம், பலவீனம் இவற்றைப் பற்றிய ஒரு பார்வையே இது. இவர்கள் உலகம் முழுவதும் மதத்தின் பெயரால் நடத்திய கொடூரங்களையும், மனித சமுதாயத்தை அழித்து ஒழித்ததையும் பல வரலாற்று கட்டுரைகள் மூலமாக படித்திருக்கிறோம். ஆனால் இந்த செயல்களுக்கு காரணமான விதையை நாம் அதிகமாக கண்டு கொண்டதில்லை . அதைப் பற்றி அதிகமாக விமர்சித்ததும் இல்லை.



இன்றைய யுத்த களத்தில் உள்ள பிரதான எதிரி இஸ்லாம். மற்றொன்று கிறிஸ்தவம். இரண்டின் நோக்கத்திலும் அதிக வித்தியாசம் இல்லை. ஒன்றின் பரிணாம வளர்ச்சியே மற்றொன்று. இரண்டின் விதையும் ஒன்றே. இரண்டு மதங்களின் அடித்தளங்களும் ஒரே கொள்கையால் கட்டப்பட்டதுதான். இரண்டிற்கும் நிறுவியர் உண்டு. இவைகளை மதம் என்று கூறுவதைவிட அமைப்புகள் என்று கூறுவதே சரியானது. இருந்தாலும் நமது நடைமுறைக்காக மதம் என்றே வைத்துக் கொள்வோம். இந்த அடித்தளமாகிய நிறுவனர்கள் பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வந்தாலே போதும், இந்த மதங்களின் சாம்ராஜ்ஜியங்கள் சரிந்துவிடும். பல எழுத்தாளர்கள் எழுத தயங்கும் பல வரலாற்று சம்பவங்களை உங்கள் முன் வைக்க முயற்சிக்கிறேன். இதில் கற்பனை ஏதும் கலவாது படித்ததை அப்படியே எனது நடையில் உங்கள் முன் வைக்கிறேன்.



மதங்களில் புதியதும், மிக குறுகிய காலத்தில் உலகின் பல பகுதிகளில் கால் பதித்ததும், இன்று பயங்கரவாதம் என்றவுடன் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் மதமாகிய இஸ்லாம் பற்றியும், அதன் நிறுவனர் முகம்மது நபிகள் பற்றியும், அவரது திருவாயால் மலர்ந்த அமுத மொழிகளாகிய குரான் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். இன்றைய காலகட்டத்திற்கு இதை அறிந்து கொள்வது பகுத்தறிவு உள்ள ஒவ்வொரு ஹிந்துவிற்கும் அவசியம். எனவே ஒவ்வொரு வாசகரும் இதை ஆராய்ந்து பார்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இது மற்ற மதங்களை குறை சொல்வதோ அல்லது மற்றவர்களை கேவலமாக பேசுவதற்காகவோ அல்ல. அந்த மதங்களின் உண்மையான முகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதே இதன் நோக்கம்.



எனது வாதத்தை விமர்சிக்க விரும்புவர்கள் ஆதாரத்துடன் விமர்சிக்கவும் . எனது கட்டுரையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை தாங்கள் முறையான ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினால் அதை மாற்றிக்கொள்ள தயாராக உள்ளேன்.வீணே கல் எறிய வேண்டாம். அது தங்கள் நேரத்தையும், எனது நேரத்தையும் வீணாக்கும் வேலையாகும். முறையான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. தைரியமாக எழுதுங்கள். வார்த்தை நாகரித்துடன் .....

Thursday, January 11, 2007

வெட்கப்பட வைக்கும் உண்மை...



இந்த கட்டுரையை ''The New Indian Express''ல் எழுதியவர் திருமதி. மேனகா காந்தி. அதன் தமிழ் வடிவம் இது.



தோல்மற்றும் இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா, உலகில் பெரும்பங்கு வகிக்கிறது என்பது உண்மை. இவை எங்கிருந்து வருகிறது, எப்படி ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொண்டால் நாம் இதைப்பற்றி பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.


சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் கால்நடை வெட்டும் கூடங்களைப் பற்றிய 200க்கும் மேற்பட்ட புகார்கள் என்னிடம் உள்ளது. இதில் அதிகப்படியான புகார்கள், பசுக்கள் மற்றும் கன்றுகளை அடைத்துச் சென்ற லாரிகளைத் தடுத்து நிறுத்தியவர்களிடமிருந்து வந்தவை. இப்படி லாரிகளில் அடைத்துச் செல்லப்பட்ட கால்நடைகளில் மிகுதியானவை காயங்களினாலும், மூச்சுவிட முடியாத நிலையினாலும் இறந்து விடுகின்றன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கால்நடைகளை காவல்துறையினர் லஞ்சம் பெற்றுக் கொண்டு விட்டுவிடுகின்றனர்.


முலாயம்சிங் அரசு நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடை வெட்டும் கூடங்களுக்கு, இறைச்சி ஏற்றுமதிக்கான லைசென்சு வழங்கியுள்ளதால் உத்திரப்பிரதேசம் இந்தியாவின் மிகப்பெரிய கால்நடை வெட்டும் களமாக மாறியுள்ளது. மகாராஷ்டிரா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பசுக்கள் டியோனார் கொண்டு செல்லப்பட்டு சட்டத்துக்குப் புறம்பாக வெட்டப்படுகிறது.



ஒரு பசுவோ அல்லது எருமையோ இல்லாத பங்களாதேசம், வருடத்திற்கு 1 லட்சம் டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறது. எப்படி? ஒரிஸ்ஸா மற்றும் பீகாரிலிருந்து கடத்தப்பட்டு மேற்கு வங்காளம் கொண்டு செல்லப்படும் பசுக்கள், அங்கிருந்து பங்களாதேசத்திற்கு அனுப்பப்படுவதால் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்லப்படும் பசுக்கள் கேரள எல்லையில் அமைந்துள்ள டஜனுக்கும் மேற்பட்ட வெட்டுக் கூடங்களில் கொல்லப்பட்டு, அதன் இறைச்சியானது மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பஞ்சாபிலிருந்து போலிச் சான்றிதழ்கள் காட்டியும், ரயில்வே துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும் ரயில் பெட்டிகளில் அடைத்து கால்நடைகள் மேற்கு வங்கத்திற்குக் கடத்தப்படுகின்றன.


அரியானா மாநிலத்திலிருந்து கடத்தப்படும் பசுக்கள் டில்லியில் செயல்படும் அங்கீகாரம் பெறாத 11,000க்கும் மேற்பட்ட வெட்டுக் கூடங்களாகிய சேரிகளில் செயல்படும் சிறிய இறைச்சிக் கூடங்களில் வெட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படும் கொடூரம், இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சட்டம் கூறுவது என்னவெனில் ஒரு டிரக்கில் நான்கு பசுக்கள் மட்டுமே ஏற்றிச் செல்லப்பட வேண்டும். ஆனால் நடைபெறுவது என்னவெனில் எனது இயக்கத்தை சேர்ந்தவர்கள் பிடிக்கும் லாரிகளில் எல்லாம் 50-க்கும் மேற்பட்ட பசுக்கள் ஏற்றப்பட்டு இருந்தது. காரணம் என்னவெனில் இதற்காக போலீசார் லஞ்சம் பெற்றுக் கொள்கின்றனர். நீதிபதிகளும் லஞ்சம் பெற்றுக் கொண்டு போலிச் சான்றிதழ்களை தினசரி வழங்குகின்றனர்.



சட்டத்திற்குப்புறம்பாக வெட்டப்படும் கால்நடைகளைப் பயன்படுத்தியே தோல் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. ஏற்றுமதி செய்யப்படும் இறைச்சியும், இளவயது பசுக்கள் மற்றும் அவற்றின் கன்றுகளை வெட்டியே அனுப்பப்படுகின்றன. இந்த உண்மையை புறக்கணிக்கும் இந்திய அரசு, உலகின் மிகப்பெரிய தோல் மற்றும் இறைச்சி ஏற்றுமதியாளர் இந்தியாதான் என்று மார்தட்டிக் கொள்கிறது. நடைபெறும் இந்தக் கொடூர குற்றத்தினால் போலீசார் மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கின்றனர். கால்நடைகள் ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு டிரக்கும் அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கின்றன. ஒவ்வொரு போலீசாரும் தினமும் ஆயிரக்கணக்கில் லஞ்சப் பணத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர்.


இந்தநிலை நீடித்தால் இன்னும் பத்து வருடத்தில் இந்தியாவில் ஒரு கால்நடைகூட மீதம் இருக்காது . ஆனால் அரசாங்கம் 1 கோடிக்கும் மேற்பட்ட கால்நடைகள் இந்தியாவில் இருக்கின்றன என்று புள்ளி விவரத்தைக் காட்டி பெருமைப்பட்டுக் கொள்கிறது. எண்ணிப் பார்த்தால் உண்மையில் இருப்பது 20 லட்சத்துக்கும் குறைவானதே. கிராமப்புறத்தில் வசிக்கும் யாரைக் கேட்டாலும் இதை உறுதிப்படுத்துவர். பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஒரு பசுவை கூட பார்க்க முடியாது. பீகாரில் சென்று பாருங்கள் , நிறைய கிராமங்களில் ஒரு பசு கூட இல்லாத நிலையே உள்ளது.



அரசாங்ககோசாலைகளில் இருக்கும் பசுக்களின் நிலையும் மோசமே. கோசாலை நிர்வாகிகள் அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை தங்களது பால் பண்ணையாக மாற்றிக் கொண்டுள்ளனர். ஆக்ராவில் இருக்கும் பால்கேஷ்வரர் கோசாலை , இறைச்சி வெட்டுக் கூடத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்மூலம் பால்தராத பசுக்கள் மாதாமாதம் வெட்டுக் கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.



கிருஷ்ணர்பிறந்த மதுராவில், பசுக்களின் இருப்பிடமான மதுராவில் ஒரு கன்றுக்குட்டியைக் கூட பார்க்க முடியாது. அவற்றை விற்று விடுகின்றனர் . ஏனெனில் நிர்வாகிகள் பசுவின் பால் தங்களுக்குத்தானே தவிர கன்றுக்கு அல்ல என நினைக்கின்றனர். உத்திரப்பிரதேச கால்நடை பராமரிப்புத் துறையால் லக்னோ நகரிலிருந்து அப்புறப்படுத்தி லக்கிம்பூர் கேரிக்கு அனுப்பப்படும் பசுக்கள் வழியிலேயே இறைச்சி கூடங்களுக்கு லாரி டிரைவர்களால் திருட்டுத்தனமாக விற்கப்படுகின்றன. கோசாலைக்கு வந்து சேரும் பசுக்களும் மாவட்ட மாஜிஸ்டிரேட்டின் கண்காணிக்கும் கண்களுக்கு எதிரிலேயே இறைச்சி விற்பனையாளர்களால் உடனடியாக எடுத்துச் செல்லப்படுகின்றன.


ராஜஸ்தான்சிரோஜியில் உள்ள மாவட்ட மாஜிஸ்டிரேட் தினமும் இறைச்சி விற்பனையாளர்களுக்கு போலிச் சான்றிதழ் வழங்குகிறார். பசு பாதுகாப்பு இயக்கத்தினர் யாராவது இந்த மாதிரி போலிச் சான்றிதழ்கள் மூலம் அனுப்பப்படும் லாரிகளைப் பிடித்தால் அவர்களை போலீசார் அடித்து விரட்டுகின்றனர்.

மும்பையில் இருக்கும் முஸ்லிம்கள் கர்ப்பிணியான பசுக்களையும், பால் கறக்கும் பசுக்களையும் மட்டுமே சாப்பிட விரும்புகின்றனர் . 10-நிமிடத்திற்கு முன்னால் பால் கறந்த பசுவின் தலை வெட்டப்பட்ட போட்டோ சான்றுகள் என்னிடம் உள்ளன. பால் கறக்கும் பசுவின் இறைச்சியைத்தான் விற்பனை செய்கிறோம் என்ற அடையாளத்திற்கு, அவற்றின் மடிக்காம்புகளும் (udders) இறைச்சியுடன் விற்கப்படுகின்றது.

மக்கள், இறைச்சி மற்றும் தோல் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அந்நியச் செலவாணியை/பணத்தை கருத்தில் கொண்டு இதை நியாயப்படுத்தினால் அவர்கள் பொருளாதாரத்திற்கு இந்த உபயோகமற்ற பசுக்களால் கிடைக்கும் நன்மைகளையும் கணக்கிட்டுப் பார்க்கவேண்டும்.



ஐந்துவருடங்களுக்குமுன் Central Institute of Agriculture Engineering எடுத்தளித்த ஒரு ஆய்வு அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 73 மில்லியன் (1990)ல் வற்றிய கால்நடைகள் - 27 மில்லியன் மெகாவாட் எரிசக்திக்கு சமமாக வேலை செய்கின்றன. அப்படி எனில் எரிசக்தி மூலப்பொருட்களான நிலக்கரி போன்றவை சேமிக்கப்படுவது மட்டுமின்றி , அவற்றின் உபயோகத்தினால் ஏற்படும் புகை மற்றும் மாசு இவைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தடுக்கப்படுகிறது .


இந்த கால்நடைகள் 5,000 கோடிக்குச் சமமான 100 மில்லியன் டன்கள் உலர்ந்த சாணத்தை அளிக்கின்றன. இவற்றால் 50 மில்லியன் டன் விறகுகள் சேமிக்கப்படுகின்றன . இதன் விளைவாக மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுகின்றது. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகின்றது . இந்த 73 மில்லியன் கால்நடைகளை மாற்றுவதற்கு நமக்கு 7.3 மில்லியன் டிராக்டர்கள் வேண்டும். ஒரு டிராக்டர் இரண்டரை லட்சம் எனில் தேவைப்படும் முதலீடு 1,80,000 கோடி. இதுதவிர 2,37,50,000 டன்கள் எரிபொருள் இவற்றின் இயக்கத்திற்கு தேவைப்படுகிறது. இதன் மதிப்பு 57,000 கோடி. இந்த கால்நடைகளுக்கு நாம் கடன்பட்டுள்ள தொகை இவ்வளவு இருக்க, இவற்றை நாம் அழித்துவிட்டால் அது நமக்கு பெரிய இழப்பாகும்.


கால்நடைகள்அழிந்தால் நமக்கு எரிசக்தி தரும் சாணம் மற்றும் உரங்கள் கிடைக்ாது. இதன் விளைவால் எரிவாயு இழப்பு ஏற்படுகிறது . எரிபொருளுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. 1994- ல் நாம் முதன் முறையாக ஹாலந்து நாட்டிலிருந்து எருவை இறக்குமதி செய்யும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டோம். ரசாயன உர இறக்குமதி 1960-ல் 1 கோடியாக இருந்தது . ஆனால் 1990-ல் 450 கோடியாக வளர்ந்து 2005-ல் இது மும்மடங்கு உயர்ந்தது. மற்ற கால்நடை உற்பத்திப் பொருள்களின் இறக்குமதியை பற்றிப் பார்ப்போம்.


பால்மற்றும் பால் பவுடர் இறக்குமதி 1950ம் ஆண்டு 6டன்னாக இருந்து 1990-ம் ஆண்டு 65-டன்னாக அதிகரித்தது. பட்டர் ஆயில் அரை டன்னாக இருந்தது 16½ டன்னாக உயர்ந்து 2006-ம் ஆண்டில் மும்மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய ரகமுள்ள ஒரு வெட்டுக் கூடத்தை சுத்தப்படுத்துவதற்கு தினமும் 16 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இது 30 லட்சம் மக்களின் தாகத்தை தீர்க்கக் கூடியது .



தண்ணீர் மற்றும் எரிசக்தி பற்றாக்குறையால் தவிக்கும் இந்தியா போன்ற நாடு, மேற்சொன்ன கால்நடை ஒழிப்பை இனிமேலும் தாக்குப்பிடிக்குமா?

Thursday, January 4, 2007

இறைவன் சொர்க்கத்தில் இருக்கிறாரா?


இறைவன் சொர்க்கத்தில் அமர்ந்து கொண்டு இந்த உலகத்தைப் படைத்தார். அவருடைய அனுக்கிரகத்திற்கு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாய்ப்பு உண்டு, என்பது ஆராயத்தக்க நம்பிக்கையே இல்லை. இது உண்மை எனில் படைப்பிலேயே குறைபாடாகும் . அதனால் நாம் இதை ஏற்றுக் கொள்வதில்லை . பாரதத்தின் தொன்மையான ஆன்மீக கலாச்சாரத்தை பாதுகாப்பது நமது கடமை. ஆனாலும் மற்ற மத கொள்கை உடையவர்களையும் நாம் அனுமதிக்கிறோம். அனுமதி என்பது அங்கீகாரமாகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் .

இந்து வழிபடுவது கல்லையா ??

இறைவன் இந்த உலகத்தை படைத்தவர் மட்டுமில்லாமல் அவரே இந்த உலகமாகவும் இருக்கிறார். இதையே சாதாரண மனிதன் இறைவன் ` தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்' என்று சொல்கின்றான். ஆகையால் தான் இறைவனை எந்த உருவத்திலும் (மரம், செடி, மலை , மிருகங்கள்) ஆவாஹனம் செய்து நாம் வழிபடுகிறோம் . அதனால் நகர மக்களும் , கிராம மக்களும், மலை வாழ் மக்களும் இந்த ஆன்மீக கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் தான். இந்த புனிதமான கலாச்சாரத்தை இஷ்டதேவதை, கிராம தேவதை மற்றும் குல தேவதை வழிபாட்டின் மூலம் சிதையாமல் போற்றி பாதுகாக்க வேண்டும். நாம் கல்லையோ, மரத்தையோ வழிபடவில்லை அதன் வழியாக கடவுளைத்தான் வழிபடுகிறோம். இதை இந்து கலாச்சாரத்திற்கு வேறுபட்டவர்களால் புரிந்து கொள்ள முடியாது.




இறைவனைப்பற்றிய இந்த மகத்தான கருத்தும், அவருடைய அனுக்கிரகம் பெறுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு என்பது மட்டுமே, அனைவரையும் ஓன்றாக இணைக்கும் ஒரு மகத்தான சக்தியாக இருக்கமுடியும். இதுவே `வேற்றுமையில் ஒற்றுமை' எனும் நமது இந்து கலாச்சாரத்தின் அஸ்திவாரமாக இருக்கிறது.

Wednesday, January 3, 2007

இராமரும் கிருஷ்ணரும் கற்பனை கதாபாத்திரங்களா?


கடவுளால்இந்த பிரபஞ்சத்தை படைக்க முடியும் என்றால் , அவரே இந்த பிரபஞ்சமாக வியாபிக்கமுடியும் என்றால் , அவர் ஒன்றுக்கு மேற்பட்ட சிறந்த வடிவங்களையும் எடுக்க முடியும். இது ஒன்றும் பெரிய விஷயமேயில்லை . அதுவே அவதாரம் என்று அழைக்கப்படும். இது நம்பிக்கை மட்டுமல்ல, இதை ஆதாரப்பூர்வமாகவும் விளக்கமுடியும் . இராமரும், கிருஷ்ணரும் அவதாரங்களே. இராமர் இங்கு பிறந்தார், இந்த பூமியில் நடந்தார், இங்கு வாழ்ந்தார். கிருஷ்ணரும் இங்கு பிறந்தார், யமுனை நதிகரையில் விளையாடினார். இப்படிதான் இராமரும், கிருஷ்ணரும் இந்த பூமிக்கு வந்தனர் . எனவே அவதாரங்கள் கற்பனை அல்ல. உண்மையே .
உங்கள்கருத்துக்களை எதிபார்த்து ...............

கடவுள் இருக்கிறாரா?

ஒருவன்கடவுளை ஏற்றுக் கொண்டாலும், இல்லாவிட்டாலும், அவனுக்கு கடவுளின் இருப்பு என்பது ஒரு புரியாத புதிராக இருக்கிறது. ஏனெனில் அவன் சில நியதிகளுக்கு உட்பட்ட, வரையறுக்கப்பட்ட சூழலில் இருக்கிறான் . இந்த நியதிகள் பலவாகவும் , ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாக இருப்பினும் இவை அனைத்தும் சேர்ந்ததே பிரபஞ்சம் . அனைத்து ஜீவராசிகளுடனும் சேர்ந்த இந்த உலகமும் , இங்கு உள்ள பொருளின் தொகுப்பும் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. இவை எவ்வாறு சீராக இயங்குகிறது என்பது வியப்பிற்குரியது. இங்கு இருக்கும் அனைத்தும் கொடுக்கப்பட்டது என்றால் கொடுத்தவர் ஒருவர் இருக்கத்தான் வேண்டும். அவரை கடவுள் என்றும் அழைக்கலாம் அல்லது வேறு பெயரிலும் அழைக்கலாம்.

Monday, January 1, 2007

இந்த நிலை ஏன்? பதில் சொல்ல வாருங்கள்

இது நவீன காலம். நவீன தொழில்நுட்பங்கள் குக்கிராமங்களுக்கு கூட சென்றுவிட்ட காலம். அனைத்துலும் சமத்துவம் பேசுபவர்கள் வாழும் காலம். இப்படிப்பட்ட இந்த காலத்திலும் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதை பெருமையாக நினைக்கிறார்கள்.
முஸ்லிம் ஆண்கள் மீசை இல்லாமல் தாடி வைத்துக்கொள்வதையும் , அசிங்கமான குல்லா அணிவதையும் பெருமையாக நினைக்கிறார்கள். பெண் சுதந்திரம் பற்றி விவாதிக்கப்படும் இந்த காலத்திலும் நான்கு மனைவிகளுடன் ஒரே நேரத்தில் வாழ்கிறார்கள்.

ஆனால்...?

ஹிந்துபெண்கள் அதுவும் படித்து பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் குங்குமம்( சில பெண்கள் ஸ்டிக்கர் பொட்டும்கூட) வைப்பதை கூட கேவலமாக நினைக்கிறார்கள். ஹிந்து ஆண்கள் வேஷ்டி அணிவதையும், விபூதி வைப்பதையும் ஏதோ பெரும் பாவம் போல் நினைக்கிறார்கள். வேஷ்டி அணிந்த ஹிந்து இளைஞனைக் கண்டால் வேற்று கிரகத்து மனிதன்போல் பார்க்கிறார்கள்.

இந்த நிலை ஏன்?
இது பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம் . தமிழிலோ, ஆங்கிலத்திலோ உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்புங்கள் . உங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் இந்த விவாதத்தில் பங்கேற்க செய்யவும்.
உங்கள்கருத்துக்களை எதிபார்த்து ...............